Wednesday, April 2, 2014

பன்னிரண்டு வயது சிறுவன்

        பன்னிரண்டு வயது சிறுவன்.புலம் பெயர்ந்து நிற்கிறேன்.ஆறாம் வகுப்பு சேரவேண்டும்.பெரியப்பா கடைசி இரண்டு பிள்ளைகளான சேஷு,சூரி இருவரும் திருச்சி இ.ஆர். மேல்நிலை பள்ளியில் படிக்கிறார்கள்.நாங்கள் ஸ்ரீரெங்கம்  ஸ்ரீனிவாச ராவ் தெருவில் வசிக்கிறோம்.இ.ஆர்.பள்ளியில் இடமில்லை.ஆகையால் திருச்சி டவுன் ஸ்டேஷன்பக்கத்தில் உள்ள உருமு தனலட்சுமி பள்ளியில் இடமிருந்தது.ரயிலில் சீசன் பாஸ் எடுத்து செல்லவேண்டும்.பெரியப்பா மூத்த மகன் சேதுராமன் ஆடிட்டருக்கு  படிக்கிறான்.அவருடன் பள்ளியில் சேர சென்றேன்.சிறிய பரீட்சை வைத்தார்கள்.அதில் தேர்ச்சி பெற்று பள்ளியில்  சேர்ந்தேன்.

Tuesday, April 1, 2014

அம்மாவின் நினைவு

அம்மாவின் நினைவு நெஞ்சைவிட்டு அகலுமா?பெரியம்மா நல்லவங்கதான்.ஆனாலும் அம்மாவாக முடியுமா?சேஷு,சூரி,காமாக்ஷி,பேபி 
சேதுராமன் எல்லோரும் நன்றாக பழகினார்கள்.திருச்சிக்கு போன இரண்டாவது நாளே வீட்டில் எனக்கு என்ன வேலை என்று புரிந்தது.சப்பாணி என்ற வேலைக்காரன் இருந்தான்.தினமும் மாலை 50,60 குடம் தண்ணீர் கொல்லையில் உள்ள கிணற்றிலிருந்து இறைத்து தருவதை உள்ளே உள்ள ட்ரம்மில் கொண்டு வந்து கொட்டவேண்டும்.இந்த வேலையை என்னை விட்டு தன குழந்தைகளிடம் ஏன் சொல்லவில்லை?என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.அதான் அம்மாவுக்கும்,பெரியம்மாவுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த விஷயம் பெரிய்ப்பவுக்குத் தெரியாது.

Monday, March 31, 2014

அம்மாவை பிரிவது

       அம்மாவை பிரிவது எத்தனைக் கொடுமை.இப்போது நினைத்தாலும் நெஞ்சு கொதிக்கிறது.பத்து வயது மகன் அம்மாவைப் பிரிந்து படிப்பிற்காக வெளியூர் செல்வது எவ்வளவு கொடுமை.வெளியில் சொல்லமுடியாமல் மனதிற்குள் அழுகிறேன். 

      பழைய துணி மணிகளை ஒரு பையில் திணித்துக் கொண்டு அம்மாவையும் சகோதரிகளையும் பிரிந்து சூரியுடன் திருச்சிக்குப் புறப்பட்டேன்.

     நானும் படித்து பெரிய மனிதனாக வேண்டும் என்ற அம்மாவின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டு புறப்பட்டேன்.இந்த நேரத்தில் என் அம்மா ஒரு தடவை idal nalamillathu இருந்தபோது நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.சிறுவயதில் காவேரி ஆற்றங்கரையில் இருக்கும் டூரிங் சினிமா கொட்டகையின் திரைக்குப் பின்புறம் காற்றில் திரைத் தூக்கும்போது நானும் என் அக்காக்களும் பார்த்து குதூகலிப்போம்  காவிரி ஆற்றின் மணலில் இரவு எட்டு மணி அளவில் உட்கார்ந்திருப்போம்.காற்றில் திரைக்கு பின் பக்கம் இருக்கும்துணி தூக்கும் போது சினமா திரை தெரியும்.
      சினிமா தெரிகிறது என்று குதிப்போம்.சினிமா பார்க்க வேணும்  என்று அம்மாவிடம் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டு ஒரு நாள் இரவு காது வலியுடன் ,துடித்துக்கொண்டிருக்கும் போது 'அம்பி, நீ சினிமா பார்க்க வேண்டும் enru சொன்னாயே.நாளை தஞ்சாவூரில் பூப்பல்லாக்கு.போய் பார்த்து வா.அத்துடன் ஒரு சினிமாவும் பார்த்து வா."என்றாள்.ஒரு ரூபாய் செலவுக்கு பணமும் கொடுத்தார்கள்.மறுநாள் மாலை ரூபாயை டிராயரில் போட்டுக்கொண்டு தஞ்சாவூர் நடந்து சென்றேன்.இரவு இரண்டாவது ஆட்டம் "வாழ்க்கை"என்ற சினிமா பார்த்தேன்.அதில் வைஜயந்திமாலா ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாட்டு பாடிய காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது.பிறகு பூப்பல்லாக்கு இரவு பார்த்து விட்டு விடியற்காலை திருவையாற்றிற்கு திரும்பி சென்றேன்.அந்த நிகழ்ச்சி இன்னும் ஞாபகம் உள்ளது.

பெரியப்பா மகள்கள்.

      பெரியப்பாவிற்கு நான்கு மகள்கள்.ஜானகி மூத்தவள்.கௌரி அடுத்தவள்.இருவருக்கும் திருமணமாகி விட்டது.ஜானகி கணவன் திரு பாலக்ருஷ்ணன்.மணப்பாறையில் ரயில்வேயில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைப பார்த்து வந்தார்.இவர்கள் வீட்டில் சிலபலகாலம் அஞ்ஞாதவாசம் இருக்க நேரிட்டது.அதைப்பற்றி பிற்பாடு சொல்கிறேன்.கௌரியின் கணவர் ஒரு மிராசுதார்.திருவையாறு பக்கத்தில் உமையாள்புரம்.இவருடன் அதிக பழக்கமில்லை.ஆனாலும் திருவையாறு தியாகராஜ உத்சவத்தில் அடிக்கடி சந்தித்து இருக்கிறேன்.நல்ல மனிதர்.என் சங்கீத ஆர்வத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்.மற்ற இரண்டு மகள்கள் பேபி,காமாக்ஷி ஆவர்.பேபி கணவர் கோவிந்தராஜன்.வக்கீல்.மதுரை டவுன் ஹால் ரோட்டில் குடியிருந்தார்.தற்போது உயிருடன் இல்லை.பேபி இருக்கிறார்.என்னைவிட ஒரு வயது மூத்தவர்.காமாக்ஷி கணவர் என்ன வேலை பார்த்தார் என்று த்தெரியவில்லை. காமாக்ஷி எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்

பெரியப்பாவின் மகன்கள்

   பெரியப்பாவின் மகன்கள் 

   பெரியப்பா சுவாமிநாத அய்யரின் கடைசி பையன் சேஷு என்ற ஆதிசேஷன்.இவன் எதுவும் படிக்கவில்லை.பத்தாவது.படித்ததோ
டு சரி.அதற்கு பிறகு வீட்டை விட்டு ஓடிவிட்டான்.எங்கு போனான் என்று தெரியவில்லை.பம்பாய் போய் ஒரு சேட்டிடம் வேலைக்கு சேர்ந்து அவருடைய பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டான்.இவன் பின்னாளில் பெரிய கட்டிட ஒப்பந்தக் காரராக ஆனார்.தற்போது பார்சன்(Parsn) என்ற பிரபல கம்பெனி எம்டி Managing Director ஆக உள்ளார்.இவர் என்னைவிட இரண்டுவயது இளையவர். 



      அடுத்த பையன் சூரி என்ற சூரியநாராயணன்.இவன் என்னைவிட நான்கு வயது மூத்தவன்.இவன்தான் என்னை திருவையாற்றிலிருந்து திருச்சிக்கு படிக்க கூப்பிட்டு கொண்டு போனவன்.இவனுக்கு படிப்பு வரவில்லை.வீட்டைவிட்டு அடிக்கடி ஓடிப்போய் விடுவான்.எனக்கு தெரிந்து ஒரு தடவை தஞ்சாவூருக்கு ஓடிப் போய்விட்டான்.அங்கிருந்து தஞ்சாவூர் ஜங்ஷன் வாசலில் இருப்பதாகவும் கூப்பிட்டுக் கொண்டு போகும்படி தொலைபேசியில் தெரிவித்தான்.பெரியப்பா போய் கூப்பிட்டு வந்தார்.பின்பு ஒரு தடவை கரூர் போய் ஒரு சிற்றுண்டி சாலையில் வேலை பார்ப்பதாக போஸ்ட் கார்டில் எழுதினான்.பெரியப்பா சென்று அழைத்து வந்தார்.இரண்டு முறையும் வீட்டு வாசலில் வைத்து கோவணம் அணிந்து நிற்க வைத்தார்.அவன் ஒவ்வொரு முறையும் வீட்டில் ஏதாவது திருடிக்கொண்டு போய்விடுவான்.பெரியப்பா என்னையம் அவனுடன் ஒப்பிட்டு பேசுவார்.அதனால் ஆத்திரப்படுவான்.அவன் வாழ்க்கையில் பெரிதாக முன்னேறவில்லை.எதோ கடை வைத்து பிழைத்துக் கொண்டான்.இப்போது பம்மலில் இருக்கிறான்.அவனை ஒரு திருமணத்தில் பார்த்தேன்.

      பெரியப்பாவின் மூத்த மகன் சேதுராமன்.இவன் என்னைவிட மிக மூத்தவன்.இவன் ஆடிட்டர் வேலைக்குப் படித்தான்.பாஸ் செய்யவில்லை.ஆனாலும் ஆடிட்டர் வேலை பார்த்து வந்தான்.நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்த போது ஒரு நாள் என்னிடம் டோபி கருப்பையா வீட்டுக்கு சென்று உருப்பிடிகளை வாங்கி வரச்சொன்னார்.எனக்கு அப்போது 10 வயதிருக்கும்.கருப்பையா வீடு ஸ்ரீ ரெங்கதில் இருந்தது. நாங்கள் ஸ்ரீரெங்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் ஸ்ரீனிவாச ராவ் தெருவில் இருந்தோம்.டோபி வீட்டுக்கு போவதை மறந்துவிட்டேன்.மாலை வந்தவுடன் கேட்டார்.என் தலையில் குட்டு வைத்தார். நான் ரோசப்பட்டுக்கொண்டு உடனே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கருப்பயா வீட்டை தேடிக்கொண்டு போனேன்.எப்பொடியோ அவர் வீட்டைகண்டுபிடித்து வாங்கி விட்டேன்.இரவு நேரமாகிவிட்டதால் கவலைப் பட ஆரம்பித்து விட்டார்ககள்.என் வாழ்க்கையில் பல கட்டங்களில் இவரோடு பழக நேரிட்டது.அதைப்பற்றி அவ்வப்பொழுது சொல்கிறேன்.இவர் இப் பொழு து உயிருடன் இல்லை/

Tuesday, March 25, 2014

வைரத்தோடு!ரெயிலே! ரெயிலே!

   ரெயிலே! ரெயிலே!


   என் அம்மா இள வயதிலேயே கணவரை இழந்தவர்.அவரிடம் வைரத்தோடு இன்னும் பல தங்க நகைகளும் இருந்தன.வைரத்தோட்டை பத்திரமாக வைதிருக்கும்பொருட்டு இதயம் பேசுகிறது மணியனின் அம்மா,அதாவது என் சித்தியிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருந்து என்  அக்கா திருமணத்தின்போது வாங்கிக் கொள்வதாக சொல்லி இருந்தார்.

     ஆனால் என் மூத்த அக்கா கல்யாணத்தின்போது கேட்டதில் அவர் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. பிறகு என் இளைய அக்கா கல்யாணத்தின்போது தங்க நகைகளாக கொடுத்தார்.

      என் தாயாரின் அண்ணா திரு வெங்கடராம அய்யர்.தஞ்சாவூரில் கூட்டுறவுத்துறையில் உதவி ஆய்வாளராக இருந்தார்.அவரும் என் குடும்பத்திற்கு அவ்வொப்பொழுது உதவி செய்து வந்தார்.என் சிறிய வயதில் தஞ்சாவூர் சென்ற போது ரயிலைப் பார்க்கவேண்டும் என்று என் அம்மாவை நச்சரிக்க மாமாவிடம் சொல்லிக் கூப்பிட்டுப்போகச் சொன்னார்.
 
      மாமா ரயில் நிலையத்திற்கு ஒரு மைல் தூரத்திலிருந்து சுட்டிக் காட்டி 'அதான் ரயில்'என்றார்.எனக்கு மனமில்லாமல் திரும்பினேன்.அந்த ஏமாற்றம் இதுநாள்வரை ஞாபகம் உள்ளது

இதயம் பேசுகிறது மணியன்

 இதயம் பேசுகிறது மணியன் 


       திருச்சிக்கு 6 ம் வகுப்பு படிக்க போகுமுன் என் உள்ளத்தில் உள்ள சில,பல எண்ணங்களை இப்போதே சொல்லிவிடுகிறேன்.ஏனென்றால் அவை என்னுடடைய 77 ஆண்டு வாழ்க்கையில் எப்போது நிகழ்ந்தன என்று சரியாக எனக்கு தெரியாது.அவை என் எட்டு வயதுலோ அல்லது பதினாறு வயதுலோ நடந்திருக்கலாம்.பின்னாளில் நான் எழுதும்போது அவைப பற்றி எழுத மறந்து விட சந்தர்ப்பம் ஏற்படும்.ஆகவே இப்போதே எழுதிவிடுகிறேன்.

       இதயம் பேசுகிறது மணியன்.இவர் என் தாயின் தங்கை தர்மாம்பாள் புதல்வராவார்.தந்தை சீதாராம அய்யர் சென்னை போர்ட் டிரஸ்ட் -ல் வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு ஆனந்த விகடன் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன் உறவினர்.மணியனுக்கு 20 வயது இருக்கும்.ஒரு நாள் திருவையாறுக்கு திடீரென்று மூட்டை முடிச்சுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.காரணம் பின்னால் தெரிந்தது.

       சென்னையில் மணியனுடைய சிநேகிதர்களுடன் சேர்ந்து சினிமா
 படம் எடுத்ததில் கடன் ஏற்பட்டதால் போலிசுக்கு பயந்து எங்கள் வந்திருக்கிறார்.எங்கள் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் மாலையில் திருவையாறு கும்பகோணம் சாலையில் பல மைல் தூரம் நடந்து போவோம்.அப்போது ரோட்டின் இரு மருங்கிலும் உள்ள புளிய மரங்களை வியந்து பாராட்டுவார்.

      இந்த புளிய மரங்களைப் பற்றி அவருடைய கதைகளில் எழுதி இ
ருக்கிறார்.அவர் எங்கள் வீட்டில் ஆறேழு மாதங்கள் இருந்தவிட்டு புறப்பட்டு போனார்.அதற்குப் பிறகு பல தடவை மணியனை சந்தித்திருக்கிறேன்.அதைப்பற்றி அவ்வப்போது சொல்லுகிறேன்.