Monday, March 31, 2014

அம்மாவை பிரிவது

       அம்மாவை பிரிவது எத்தனைக் கொடுமை.இப்போது நினைத்தாலும் நெஞ்சு கொதிக்கிறது.பத்து வயது மகன் அம்மாவைப் பிரிந்து படிப்பிற்காக வெளியூர் செல்வது எவ்வளவு கொடுமை.வெளியில் சொல்லமுடியாமல் மனதிற்குள் அழுகிறேன். 

      பழைய துணி மணிகளை ஒரு பையில் திணித்துக் கொண்டு அம்மாவையும் சகோதரிகளையும் பிரிந்து சூரியுடன் திருச்சிக்குப் புறப்பட்டேன்.

     நானும் படித்து பெரிய மனிதனாக வேண்டும் என்ற அம்மாவின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டு புறப்பட்டேன்.இந்த நேரத்தில் என் அம்மா ஒரு தடவை idal nalamillathu இருந்தபோது நடந்த விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.சிறுவயதில் காவேரி ஆற்றங்கரையில் இருக்கும் டூரிங் சினிமா கொட்டகையின் திரைக்குப் பின்புறம் காற்றில் திரைத் தூக்கும்போது நானும் என் அக்காக்களும் பார்த்து குதூகலிப்போம்  காவிரி ஆற்றின் மணலில் இரவு எட்டு மணி அளவில் உட்கார்ந்திருப்போம்.காற்றில் திரைக்கு பின் பக்கம் இருக்கும்துணி தூக்கும் போது சினமா திரை தெரியும்.
      சினிமா தெரிகிறது என்று குதிப்போம்.சினிமா பார்க்க வேணும்  என்று அம்மாவிடம் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டு ஒரு நாள் இரவு காது வலியுடன் ,துடித்துக்கொண்டிருக்கும் போது 'அம்பி, நீ சினிமா பார்க்க வேண்டும் enru சொன்னாயே.நாளை தஞ்சாவூரில் பூப்பல்லாக்கு.போய் பார்த்து வா.அத்துடன் ஒரு சினிமாவும் பார்த்து வா."என்றாள்.ஒரு ரூபாய் செலவுக்கு பணமும் கொடுத்தார்கள்.மறுநாள் மாலை ரூபாயை டிராயரில் போட்டுக்கொண்டு தஞ்சாவூர் நடந்து சென்றேன்.இரவு இரண்டாவது ஆட்டம் "வாழ்க்கை"என்ற சினிமா பார்த்தேன்.அதில் வைஜயந்திமாலா ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாட்டு பாடிய காட்சி இன்னும் ஞாபகம் இருக்கிறது.பிறகு பூப்பல்லாக்கு இரவு பார்த்து விட்டு விடியற்காலை திருவையாற்றிற்கு திரும்பி சென்றேன்.அந்த நிகழ்ச்சி இன்னும் ஞாபகம் உள்ளது.

No comments:

Post a Comment