இதயம் பேசுகிறது மணியன்
திருச்சிக்கு 6 ம் வகுப்பு படிக்க போகுமுன் என் உள்ளத்தில் உள்ள சில,பல எண்ணங்களை இப்போதே சொல்லிவிடுகிறேன்.ஏனென்றால் அவை என்னுடடைய 77 ஆண்டு வாழ்க்கையில் எப்போது நிகழ்ந்தன என்று சரியாக எனக்கு தெரியாது.அவை என் எட்டு வயதுலோ அல்லது பதினாறு வயதுலோ நடந்திருக்கலாம்.பின்னாளில் நான் எழுதும்போது அவைப பற்றி எழுத மறந்து விட சந்தர்ப்பம் ஏற்படும்.ஆகவே இப்போதே எழுதிவிடுகிறேன்.
இதயம் பேசுகிறது மணியன்.இவர் என் தாயின் தங்கை தர்மாம்பாள் புதல்வராவார்.தந்தை சீதாராம அய்யர் சென்னை போர்ட் டிரஸ்ட் -ல் வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு ஆனந்த விகடன் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன் உறவினர்.மணியனுக்கு 20 வயது இருக்கும்.ஒரு நாள் திருவையாறுக்கு திடீரென்று மூட்டை முடிச்சுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.காரணம் பின்னால் தெரிந்தது.
சென்னையில் மணியனுடைய சிநேகிதர்களுடன் சேர்ந்து சினிமா
படம் எடுத்ததில் கடன் ஏற்பட்டதால் போலிசுக்கு பயந்து எங்கள் வந்திருக்கிறார்.எங்கள் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் மாலையில் திருவையாறு கும்பகோணம் சாலையில் பல மைல் தூரம் நடந்து போவோம்.அப்போது ரோட்டின் இரு மருங்கிலும் உள்ள புளிய மரங்களை வியந்து பாராட்டுவார்.
இந்த புளிய மரங்களைப் பற்றி அவருடைய கதைகளில் எழுதி இ
ருக்கிறார்.அவர் எங்கள் வீட்டில் ஆறேழு மாதங்கள் இருந்தவிட்டு புறப்பட்டு போனார்.அதற்குப் பிறகு பல தடவை மணியனை சந்தித்திருக்கிறேன்.அதைப்பற்றி அவ்வப்போது சொல்லுகிறேன்.
திருச்சிக்கு 6 ம் வகுப்பு படிக்க போகுமுன் என் உள்ளத்தில் உள்ள சில,பல எண்ணங்களை இப்போதே சொல்லிவிடுகிறேன்.ஏனென்றால் அவை என்னுடடைய 77 ஆண்டு வாழ்க்கையில் எப்போது நிகழ்ந்தன என்று சரியாக எனக்கு தெரியாது.அவை என் எட்டு வயதுலோ அல்லது பதினாறு வயதுலோ நடந்திருக்கலாம்.பின்னாளில் நான் எழுதும்போது அவைப பற்றி எழுத மறந்து விட சந்தர்ப்பம் ஏற்படும்.ஆகவே இப்போதே எழுதிவிடுகிறேன்.
இதயம் பேசுகிறது மணியன்.இவர் என் தாயின் தங்கை தர்மாம்பாள் புதல்வராவார்.தந்தை சீதாராம அய்யர் சென்னை போர்ட் டிரஸ்ட் -ல் வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு ஆனந்த விகடன் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன் உறவினர்.மணியனுக்கு 20 வயது இருக்கும்.ஒரு நாள் திருவையாறுக்கு திடீரென்று மூட்டை முடிச்சுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.காரணம் பின்னால் தெரிந்தது.
சென்னையில் மணியனுடைய சிநேகிதர்களுடன் சேர்ந்து சினிமா
படம் எடுத்ததில் கடன் ஏற்பட்டதால் போலிசுக்கு பயந்து எங்கள் வந்திருக்கிறார்.எங்கள் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொரு நாளும் மாலையில் திருவையாறு கும்பகோணம் சாலையில் பல மைல் தூரம் நடந்து போவோம்.அப்போது ரோட்டின் இரு மருங்கிலும் உள்ள புளிய மரங்களை வியந்து பாராட்டுவார்.
இந்த புளிய மரங்களைப் பற்றி அவருடைய கதைகளில் எழுதி இ
ருக்கிறார்.அவர் எங்கள் வீட்டில் ஆறேழு மாதங்கள் இருந்தவிட்டு புறப்பட்டு போனார்.அதற்குப் பிறகு பல தடவை மணியனை சந்தித்திருக்கிறேன்.அதைப்பற்றி அவ்வப்போது சொல்லுகிறேன்.
No comments:
Post a Comment