Friday, March 21, 2014

குடும்ப சொத்துக்கள்

குடும்ப சொத்துக்கள்
     திரு சுவாமிநாத அய்யர். இவரைப்பற்றி சொல்வதற்கு முன்னால் எங்கள் குடும்ப சொத்து விபரத்தைப் பற்றி சொல்லவேண்டும்.என் தாத்தா என் காலமாவதற்கு முன்பே காலமாகி விட்டார்.ஆகையால் அவருக்கு சொந்தமான சொத்துக்களை என் தந்தை,சித்தப்பா பெரியப்பாக்களும் சமமாக பிரித்துக்கொண்டார்கள்
     என் பாட்டி என் தந்தைக்கு பின்னால் காலமாகியதால் அவருக்கு சொந்தமான சொத்துக்களை என் தந்தை தவிர சித்தப்பாவும்,பெரியப்பாக்களும் பங்கு போட்டுக்கொண்டார்கள்.
     இதில் சுவாமிநாத பெரியப்பாக்கு வருத்தம்.என் அப்பா இறக்கும் தருவாயில் சுவாமிநாத பெரியப்பாவிடம் எங்கள் குடும்பத்தை பார்த்துகொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.என் அப்பா உயிருடன் இருக்குபோது பெரியப்பாவை தோளில் தூக்கி திரிவாராம்.இதை சித்தப்பா சொல்லி எனக்கு தெரியும்.என் தாத்தா வழி கிடைத்த சொத்தின் மூலம் கிடைத்த வருவாயைத்தான் சித்தப்பா வருடா வருடம் கொடுத்துவந்தார்.தவிர சுவாமிநாத பெரியப்பாவும் தன பங்குக்கு சில மூட்டை நெல்லை கொடுப்பார்.

     என் அப்பா எனக்கு ஆறு மாதம் இருக்கும்போதே காலமாகி விட்டார்.என் அப்பாவுக்கு வெறும் அறுநூறு ரூபாய் இன்சூரன்ஸ் பணம் மட்டும் கிடைத்தது.தவிர என் தாத்தாவின் சொத்தில் பங்கு கிடைத்தது.சொத்தில் மூன்றில் ஒரு பங்கு என் மூத்த சகோதரி கல்யானத்தின்போதும்,ஒரு பங்கு என் இரண்டாவது சகோதரி கல்யானத்தின்போதும் விற்கப்பட்டது.மீதி ஒரு பங்கு எனக்கு 22 வயதிருக்கும்போதும் விற்கப்பட்டது.

     இன்சூரன்ஸ் பணம் ரூபாய்600-ல் வந்த வட்டியில் ரூபாய் 10 மட்டும் என்அம்மா வீட்டு செலவு செய்வார்கள்.தவிர வீட்டில் இருக்கும் நெல்லை விற்று செலவுக்கு வைத்துகொள்வார்கள்.சுவாமிநாத பெரியப்பா அவ்வப்பொழுது ரூபாய் 10அனுப்புவார்கள் . நான் ஐந்தாவது வகுப்பு வரை பாலகணபதி பள்ளியில் படித்தேன். சுவாமிநாத பெரியப்பா திருச்சி ஸ்ரீரங்கத்தில் பொதுப்பணி துறையில் எஞ்சினியர் வேலை பார்த்தார். ஆறாவது வகுப்பிலிருந்து திருச்சியில் படிப்பதற்காக என்னை திருச்சிக்கு கூட்டிபோக அவர் இரண்டாவது பையன் சூரியை திருவையாற்றுக்கு அனுப்பினார்.குடும்ப சொத்துக்கள்

No comments:

Post a Comment