மாங்குடி சத்திரம் என்பது வீடுதான்.நாங்கள் அங்கு குடியேறினோம்.சத்திரம் என்பது பொதுவாக தர்மத்திற்கு ஏற்பட்டது.ஆனால் இது திருவையாறு பக்கத்தில் உள்ள மாங்குடி என்ற கிராமத்தில் வசித்து அந்த அண்ணா என்பவரால் நிர்வகிக்கப்பது.பாவசாமி அக்ரகாரம் என்பது மேற்கு கிழக்கு தெரு.இந்த தெருவில் 40 ம் இலக்கமுள்ள வீடு மாங்குடி சத்திரம்.இந்த தெருவில் பிரபல கதா
காலக்ஷேப வித்வான் ஸ்ரீ அண்ணாசாமி பாகவதர் குடியிருந்தார்
மாங்குடி சத்திரம் இரண்டு திண்ணை உள்ளது.முதல் திண்ணை நீண்டது.இரண்டாவது திண்ணை அதில் பாதி இருக்கும்.அங்கு இரும்பு கேட்.அதைத் திறந்துகொண்டு. உள்ளே போனால் சுமார் 10 அடி நீளமுள்ள பாதை,இருபக்கமும் இரண்டு அடி அகலமுள்ள திண்ணை.அதன்பிறகு மரக்கதவு.மரக்கதவின் இடதுபக்கம் ஒரு அரை.ஒட்டி ஒரு குதிர்,வலதுபக்கம் இரண்டுஅறைகள்.இந்த மூன்று அறைகளை ஒட்டி பெரிய ஹால்.ஹல்லில் பத்தி திறந்த வெளி.
ஹால் ஒட்டி இடது, வியது பக்கங்களில் முறையே இரண்டு அறைகள்.இத்துடன் முதல் கட்டு முடிகிறது.
கதவைத் திறந்து போனால் இடது பக்கம் ஒரு குதிர்.அடுத்து கொள்ளை வழியும் மாடிப்படியும். அடுத்து கிணறும்,கிணத்தடியும்(திறந்தவெளி).இடது பக்கம் உள்ள அரை நாங்கள் குடியிருந்தோம்.இடதுபுறம் ஒரு வராந்தாவும் ஒட்டி இன்னொரு அரையும்.
காலக்ஷேப வித்வான் ஸ்ரீ அண்ணாசாமி பாகவதர் குடியிருந்தார்
மாங்குடி சத்திரம் இரண்டு திண்ணை உள்ளது.முதல் திண்ணை நீண்டது.இரண்டாவது திண்ணை அதில் பாதி இருக்கும்.அங்கு இரும்பு கேட்.அதைத் திறந்துகொண்டு. உள்ளே போனால் சுமார் 10 அடி நீளமுள்ள பாதை,இருபக்கமும் இரண்டு அடி அகலமுள்ள திண்ணை.அதன்பிறகு மரக்கதவு.மரக்கதவின் இடதுபக்கம் ஒரு அரை.ஒட்டி ஒரு குதிர்,வலதுபக்கம் இரண்டுஅறைகள்.இந்த மூன்று அறைகளை ஒட்டி பெரிய ஹால்.ஹல்லில் பத்தி திறந்த வெளி.
ஹால் ஒட்டி இடது, வியது பக்கங்களில் முறையே இரண்டு அறைகள்.இத்துடன் முதல் கட்டு முடிகிறது.
கதவைத் திறந்து போனால் இடது பக்கம் ஒரு குதிர்.அடுத்து கொள்ளை வழியும் மாடிப்படியும். அடுத்து கிணறும்,கிணத்தடியும்(திறந்தவெளி).இடது பக்கம் உள்ள அரை நாங்கள் குடியிருந்தோம்.இடதுபுறம் ஒரு வராந்தாவும் ஒட்டி இன்னொரு அரையும்.
முதல் கட்டில் உள்ள அறையில் சத்திரத்தின் உரிமையாளரின் உறவினரான பெண்மணி குடியிருந்தார்.பெயர் யோகாம்பாள்.வயது 70 இருக்கும்.அவரை நாங்கள் கண்ணாடி பட்டி என்று கூப்பிடுவோம்.சோடா மூடி கண்ணாடி போட்டிருப்பார்.அவர்தான் சத்திர பாதுகாப்பாளர்.சத்திரத்தின் உரிமையாளர் மிகவும் இரக்ககுணமுள்ளவர்.நாங்கள் குடியிருந்த அறைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.நாங்கள் 1943 முதல் 1953 ம் வருடம் முடிய,அதாவது நான் எஸ்.எஸ்.எல்..சி. முடிக்கும் வரை.அதை கண்னாடிப்பாட்டியிடம் கொடுப்போம்
No comments:
Post a Comment