Monday, March 3, 2014

      எனக்கு இப்போது 77 வயதாகிறது. என்னுடைய அரை வயதில் தந்தை காலமாகிவிட்டார்.என்னுடைய சொந்த கிராமம் கணபதி அக்ரஹாரம்.அங்கிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள ஈச்சங்குடி என்ற ஊருக்கு என் அம்மா மற்றும் நான் என் அக்காக்கள் இருவரும் குடிபெயர்ந்தோம்.என் அக்காக்கள் இருவர்க்கும் முறையே ஆறு,எட்டு வயதிருக்கும்.எனக்கு நான்கு.அந்த வயதிற்கு முந்தய எதுவம் ஞாபகம் இல்லை.

       நான் அப்போது குடுமி வைத்திருந்தேன்.நாங்கள் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தோம்.நான் அப்போது கடுக்கன் அணிந்திருந்தேன்.நான் அப்போதெல்லாம் வீட்டின் பின்புறம் விளையாடுவேன்.அப்படி ஒரு நாள் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது மூக்கறையன் என்பவன் மிட்டாய் ஒன்றைக் கொடுத்து என் கடுக்கனைக் கேட்டான்.அதன் பிறகு என் அம்மா கேட்டபோது மூக்கறையன் மிட்டாய் கொடுத்து கழட்டிக் கொண்டததைச் சொன்னவுடன் கடுக்கனை மூக்கரைனிடமிருந்து .........

நாளை தொடருகிறேன் 

No comments:

Post a Comment